அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திலும் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த போலீசாரும், ஊராட்சி தலைவரும் சம்பவ இடத்திற்கு சென்று குடிநீர் சரியாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பிறகு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.