அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகில் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஏலாக்குறிச்சி பகுதியில் இருக்கும் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது சுகாதாரமற்ற முறையில் நடத்தப்பட்ட 5 இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அதோடு சுகாதார துறை ஆய்வாளர்கள் இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து 5 கடைகளுக்கு 1100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.