சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர் நரியன் காடு காவலர் குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மோட்டார் சைக்கிள்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்கள் யாராவது காவலர் குடியிருப்புக்குள் புகுந்து இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர.