ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துகோம்பை பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ளவர்களுக்கு குடிநீர் சீராக வழங்கப்படாமல் இருந்துள்ளது இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 15 நாட்களாக தண்ணீர் வராததால் அவதிப்பட்ட பெண்கள் ஆலத்துகோம்பை பேருந்து நிலையத்திற்கு வந்து திடீரென காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவி சத்யாவின் கணவர் சிவராஜ் பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது சிவராஜை சூழ்ந்து கொண்ட பெண்கள் சராசரியாக கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து இன்று மாலைக்குள் சீராக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது தொடர்ந்து பெண்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.