அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அன்னாசி மலை அருகே ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கடைகள் அமைந்துள்ளது. இந்த கடைகளுக்கு முன்பு முதியவர் இறந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பருவம் காலனியைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளியான முத்தையன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.