கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவதிகை வள்ளி கந்தன் நகரில் குமார் என்பவர் தங்கி இருந்து 3 சக்கர ஆட்டோவில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று குமார் திருவதிகையில் இருந்து அரசூர் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் ஓடும் வாகனத்திலேயே குமார் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.