உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். எஸ்பி பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “பர்வாரியில் உள்ள பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவலின்படி 4 பேர் பலியாகியுள்ளனர், சிலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலை இருந்து வெகு தொலைவில் உள்ளது குடியிருப்பு பகுதி… மீட்பு பணி நடந்து வருகிறது… உற்பத்தி மற்றும் விற்பனைக்கான உரிமம் அவர்களிடம் இருந்தது. 5-6 பேர் காயமடைந்துள்ளனர்.”என தெரிவித்தார்.