நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் மாசு ஏற்படுத்திய மத்திய மாநில அரசுகளின் வாகனங்களை மாற்றுவதற்கு நிதி ஒதுக்கப்படும் என பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பழைய வாகனங்களை அகற்றும் திட்டத்திற்கு மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசும் நிதி ஒதுக்கும் என்றார். மேலும் 2070 ஆம் ஆண்டுக்குள் 0 கார்பன் வெளியேற்றம் என்ற இலக்கு எட்டப்படும் என தெரிவித்தார்.