திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் எழிலன், காங்கிரஸ் ஆட்சி காலத்துல நீட் வந்தது, தப்பு. முழுமையான தப்பு. அது பொய். காங்கிரஸ் ஆட்சி காலத்துல வந்து காமன் என்ட்ரன்ஸ் எக்ஸாம். அதாவது எந்தெந்த மாநிலங்களுக்கு தேர்வு விருப்பம் இருக்கோ….  அந்தத் தேர்வை எடுத்துக்கலாம். ஆப்ஷனல். அது நீட் கிடையாது, அது ஒரு காமன் என்ட்ரன்ஸ் எக்ஸாம்.  ஏன் கொண்டு வந்தாங்க ?  ஒரே தேர்வு வழியாக போலாம்.

எந்தெந்த மாநிலம் விருப்பம் இருக்கோ அந்த மாநிலம் எடுத்துக்கலாம் என்று சொன்னது தான் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நோட்டிபிகேஷன். அதற்க்கே எதிர்ப்பு தெரிவித்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர். கடிதம் எழுதினார். அப்போ மனித வளத்துறை அமைச்சராக இருந்த கபில் சிபிலுக்கு  கடிதம் எழுதினார். சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்.

நீங்கள் காமன் என்டரன்ஸ் டெஸ்ட் என்ன வேணும்னாலும் வச்சுக்கோங்க.. உங்களின் எந்த வகையான என்ட்ரன்ஸ் எக்ஸாமும்  எங்களுக்கு நுழைவுத் தேர்வு ரத்து சட்டம் இருக்கறதுனால…  அது செல்லாது என்று கடிதம் எழுதியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். கூட்டணி கட்சி தர்மத்தை பத்தி பேசுறேன். பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக பாத்து கேட்கிறேன்… மோடி அவர்கள் அமர்ந்தார், பக்கத்துல எடப்பாடி அமர்ந்தார் என பெருமையா பேசுறீங்க.

இப்ப மாநாடு நடத்துறாங்களே..  அவங்கள பாத்து கேட்கிறேன். உங்கள் கூட்டணியில் இருக்கிற கட்சியான பாஜகவுக்கு என்னைக்காவது அதிமுக  கேள்வி கேட்டு இருக்கீங்களா ? கடிதம் எழுதி இருக்கீங்களா ? போராட்டம் பண்ணி இருக்கீங்களா ? சட்டமன்றத்திலே தமிழ்நாட்டு முதல்வர் காஷ்மீர் விவகாரம் வந்தா வெளிநடப்பு செஞ்சுறீங்க, ஆளுநரை எதிர்த்து தீர்மானம் போட்டா வெளிநடப்பு செஞ்சுறீங்க,  சிஏஏ எதிர்த்து நாங்க தீர்மானம் போட்டா வெளிநடப்பு செஞ்சுறீங்க,

உங்க கட்சியோட அதிகாரத்தை புடுங்குறதுக்காக ரகசியமாக போய் நீங்க மோடி அவர்களையும் பாக்குறீங்க. ரகசியத்தை பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு உரிமை கிடையாது. என்றாவது வெளிப்படையாக வந்து…  நாங்க நீட்டுக்கு எதிர்ப்பாக மோடி அவர் கிட்ட பேசுறோம்னு சொல்லி இருக்கீங்களா ? எங்க இளைஞரணி செயலாளர் சொன்னார்.  விளையாட்டுத்துறை அமைச்சராக பிரதமரை பார்த்து, கேல் ரத்னா விருது வாங்கிட்டு சொன்னாரு..  தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு கொடுங்க என ஓப்பனா சொன்னவர் எங்கள் இளைஞர் அணி செயலாளர் என தெரிவித்தார்.