சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்த தனியாக பார்க்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருசக்கர பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரம் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். சென்னையில் தற்போது 6 பேருந்துகளை நவீன மயமாக்கும் நடவடிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஈடுபட்டுள்ளது.

அதன்படி அம்பத்தூர், பெரியார் நகர், திருவிக நகர், முல்லை நகர் மற்றும் கவியரசு கண்ணதாசன் நகர் ஆகிய 6 பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்பட இருக்கிறது. இந்த பேருந்து நிலையங்கள் தலா 5 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட இருக்கிறது. இதேபோன்று 25 கோடி மதிப்பீட்டில் தண்டையார்பேட்டை பேருந்து நிலையமும் புதுப்பிக்கப்பட இருக்கிறது. மேலும் இந்த பேருந்து நிலையங்களை புதுப்பிக்கும் போது அதில் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங் வசதியையும் ஏற்படுத்த வேண்டும் என தற்போது பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.