தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பூல் பாண்டியன். இவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று வாழும் நிலையில் தொடர்ந்து தான் யாசகம் பெறும் பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக வழங்கி வருகிறார்.

பூல் பாண்டியன் இதுவரை 56 லட்ச ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார். இந்நிலையில் பூல் பாண்டியன் தற்போது திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் தான் யாசகமாக பெற்ற 10,000 ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக கொடுத்துள்ளார். மேலும் முதியவரின் செயலுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.