பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து சுமன் என்ற இளைஞர் கீழே விழுந்துள்ளார். இதில் அவரது ஒரு கை தூண்டாகியுள்ளது. இதைையடுத்து தனது துண்டான கையை மறு கையில் எடுத்துக்கொண்டு மருத்துவமனை நோக்கி சுமன் ஓடத் தொடங்கியுள்ளார்.

விரைந்து சென்று விட்டால் தனது கையை மீண்டும் உடலில் மருத்துவர்கள் பொருத்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் ஓடிக்கொண்டிருந்த இளைஞரை பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் சுமன் குமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததோடு அவரது குடும்பத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

50 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்த கார்…. 6 வயது சிறுவன் பலி…. கோர விபத்து….!!!