ஒருமுறை கேரளாவில் உள்ள கோயிலுக்கு சென்ற போது என் சட்டையை கழட்ட சொன்னார்கள். சட்டையை கழட்டாமல் கோயிலுக்கு வெளியே இருந்து பிரார்த்திப்பதாக கூறினேன்.  அனைவரையும் சட்டையை கழட்ட நிர்ப்பந்திக்க மாட்டார்கள். சிலரிடம் மட்டுமே கூறுவார்கள். இந்த நடைமுறை மனிதாபிமானம் அற்றது. கடவுளின் முன் அனைவரும் சமம் என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.