திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் குணா குகை, மோர் பாயிண்ட், பில்லர் ராக், பைன் மரக்காடு உள்ளிட்ட சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்கின்றனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்தும் மகிழ்ச்சி அடைகின்றனர். பின்னர் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியை பார்த்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.