புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்பதால் பலர் அசைவ உணவுகளை தவிர்க்கின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமையுடன் புரட்டாசி மாதம் முடிவடைந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் விரும்பிய மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

மேலும் காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் செயல்பட்டு வரும் மீன், இறைச்சி கடைகளில் கடந்த ஐந்து வாரங்களாக விற்பனை குறைந்து காணப்பட்டது. தற்போது புரட்டாசி மாதம் முடிவடைந்ததால் வழக்கம் போல விற்பனை சூடு பிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.