அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் சந்திரன். இவர் கடந்த 18ஆம் தேதி திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சந்திரனுக்கு நுரையீரலில் தொற்று இருப்பதாக தெரிவித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் பரிதாபமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரது இழப்பு காவல்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.