கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குள்ளேகவுண்டனூர் வாய்க்கால் மேடு பகுதியில் ஒருவரின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கடலமாக மீட்கப்பட்ட நபர் பூசாரிபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பது தெரியவந்தது. இவர் கால்வாயில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.