திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கம்பிளியம்வட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கோடங்கிபட்டியில் வசிக்கும் முருகன், செல்லையா என்பது தெரியவந்தது.

இருவரும் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முருகன், செல்லையா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 24 ஆயிரத்து 500 ரூபாய் பணம், 70 லாட்டரி சீட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.