திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு குளு குளு சீசன் நிலவுவதால் தமிழகம் மற்றும் என்று வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காக்களுக்கு சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதனையடுத்து நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து குதிரை சவாரி செய்தும் உற்சாகம் அடைந்தனர். நகரின் முக்கிய பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.