தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் 20 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வாலிபர்க்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. நேற்று திருமணத்தை நடத்த உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் வீட்டிலிருந்த இளம்பெண் திடீரென காணாமல் போய்விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இளம்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.