கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசீபுரம்-பூண்டி சாலையில் கூலி வேலை பார்க்கும் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் இளமதி அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சாமிநாதன் அவரது மனைவி மகள் இளமதி ஆகியோர் நரசிபுரத்தில் இருக்கும் பிரேம்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து மாட்டிற்கு தேவையான தீவனத்தை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு இளமதி வந்து கொண்டிருந்தார்.

அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 15 அடி உயரமுள்ள தென்னை மரம் சாய்ந்து இளமதி மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த இளமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று இளமதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.