தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேட்பாளம்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுமிதா சுதா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் இளைய மகள் சுதா அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனை பார்த்து மன உளைச்சலில் இருந்த சுதா விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களது மகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.