சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரத்தில் ரத்தினகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் நான் தாம்பரம் காந்தி சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறேன். எனது ஹோட்டலுக்கு சக்தியேந்திர நாயர் என்பவர் அடிக்கடி வந்து சென்றார். அவர் தான் இந்தியர் ஆயில் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை பார்ப்பதாக கூறினார்.

எனக்கும் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடம் இருந்தும், எனது நண்பர் ஸ்ரீராமிடம் இருந்தும் மொத்தம் 29 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கினார். ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.