கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் புல்லுக்காடு ஹவுஸிங் யூனிட்டில் நிஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள், 4 மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் அசாருதீன் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்நிலையில் நிஷா தனது மகனை கண்டித்து ஒழுங்காக வேலைக்கு செல் என கூறினார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அசாருதீன் தனது தாயை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து நிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அசாருதீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.