ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையப் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் இந்திரா காந்தி வீதியைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் ராஜா என்பது தெரியவந்தது.

இருவரும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பால்ராஜ் ராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த இரண்டு செல்போன்கள், லாட்டரி சீட்டுகள், 2000 ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.