கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோழிப்போர்விளை பகுதியில் மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். மேலும் வேலை செய்த பணத்தையும் செலவழித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பல்வேறு இடங்களில் பெண் பார்த்தனர். ஆனாலும் யாரும் தினேஷுக்கு பெண் கொடுக்க முன் வரவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த தினேஷ் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.