திமுக சார்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளரான தமிழ்க் கேள்வி செந்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் யாருக்காக போராடிக்கொண்டு இருக்கின்றார் என்றால் ? அவர் ஒரு அமைச்சராக அல்ல…  தமிழ்நாட்டின் முதலமைச்சர் மகனாக அல்ல…  கலைஞரின் பேரனாக அல்ல…  அனிதாவின் அண்ணாக நீட்டை எதிர்த்து போராடி கொண்டிருக்கிறார்.  ஜெகதிஸ்வரனின் அண்ணாக நீட்டை எதிர்த்து போராடி கொண்டிருக்கிறார்.

இனி இந்த மண்ணில் ஒரு அனிதா,  ஒரு ஜெகதீஸ்வரன் உயிர் பறி போய்விடக் கூடாது என்ற துடிப்பில் அவர் போராடிக் கொண்டிருக்கிறார். எனில் உள்ளபடியே தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் யார் ? அப்படின்னா…  நான் சொல்லல,  அமைச்சர் மாசு சொல்ல, அண்ணன் உதயநிதி அவர்கள் சொல்ல, அல்லது இங்க இருக்கக்கூடிய தயாநிதி மாறனோ,  மற்றவர்களோ  சொல்லல.

உள்ளபடியே தனியார் பெரு நிறுவனங்களுக்கு… தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக தான் நீட் அப்படிங்கற உண்மையை… ரகசியத்தை ஒருத்தர் உளறினார்…. அவர் அதி புத்திசாலி… 20,000 புத்தகம் படிச்சவரு. ஆனால் பாவம் ரெண்டே ரெண்டு திருக்குறள் தெரியாது. அவருக்கு பெயர் அண்ணாமலை. அவர் இப்ப செய்தியாளர் சந்திப்பில் உண்மையை உளறினார்.  நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை, நான் சொல்றேன் என தெரிவித்தார்.