அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சங்கரன்கோவில்ல எடப்பாடி கூட்டத்துல வெற்று சேர் இருந்துச்சு. தலைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து கூட்டி வந்த கூட்டம் எல்லாம் கால் சீட்டுக்கு வந்த மாதிரி ரெண்டு மணி நேரம்,  3 மணி நேரம் வந்துட்டு சிப்ட்டுக்கு வந்த மாதிரிஎந்திரிச்சு போயிட்டாங்க,  உங்களுக்கு தெரியும்…  வெறும்  காலி சேரு கிட்ட தான் சவால் விட்டு பேசிட்டு இருந்தாரு, இதுதான் நிலைமை.

வருகின்ற போது பாராளுமன்ற பொது தேர்தலில் பழனிச்சாமி பெரும் வீழ்ச்சியை சந்திக்க போகிறார். எப்படி மகாபாரதத்தில் துரியோதன அகம்பாவத்துல பேசி திரிவார். கடைசியாக வீழ்ச்சியை சந்தித்தது போல, துரியோதனன் போன்ற துரோக சிந்தனையுடைய பழனிச்சாமி வீழ்ச்சி அடையப்போவது உறுதி.  அதுதான் நான் இந்த நேரத்துல உங்களுக்கு சொல்லுகிறேன்.

பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம்பெறும். அடுத்த ஆப்ஷன் நான் சொன்னேன். ஒரு வேலை நாங்கள் கூட்டணியில் இருக்க முடியாத சூழ்நிலை வந்தால்?  தனித்து நிற்கவும் தயாராக இருக்கிறோம் என்று சொல்லி உள்ளேன்.

இதெல்லாம் உரிய நேரத்தில் அதற்கான முடிவை எடுத்து அறிவிப்போம் என்று சொல்லி இருக்கிறேன். அதனால அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீங்க பூத்து கமிட்டி அமைக்கின்ற வேலையை செய்ங்க. இங்க வந்து இருக்குறவங்க தான் கட்சியை அந்தந்த  நடத்திக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் தான் பூத் கமிட்டி அமைக்கணும். அந்த பணியில் இறங்குங்க என்று சொன்னேன் என தெரிவித்தார்.