லக்னோ நகரத்தை சேர்ந்த 26 வயது மது சிங், வணிகக் கடற்படையில் பணிபுரிந்த அனுராக் என்பவரை கடந்த பிப்ரவரி 25ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணம், ஒரு திருமண இணையதளம் மூலம் நடைபெற்றது. அனுராக், ஹாங்காங்கில் உள்ள கப்பல் மேலாண்மை நிறுவனத்தில் இரண்டாம் அதிகாரியாக பணியாற்றுகிறார்.

திருமணத்திற்குப் பிறகு, ரூ.15 லட்சம் வரதட்சணை கேட்டதாக மதுவின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். அவர்கள் ஏற்கனவே ரூ.5 லட்சம் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

திருமணத்திற்குப் பிறகு மதுவை அனுராக் தொடர்ந்து வற்புறுத்தியதுடன், சில வாரங்களுக்குள் அவரை தாக்கியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. மதுவின் தந்தை ஃபதே பகதூர் சிங் கூறியதாவது, “என் மகள் கர்ப்பமாக இருந்த போதும், அவளை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தினார். அதுபோல் பலமுறை அடித்துள்ளார். ஒரு முறை பாட்டிலை அவருக்கு எதிராக  வைத்ததாக அவளை கடுமையாக தாக்கியுள்ளார்” என்றார்.

மேலும், அனுராக் ஒரு வேறு பெண்ணுடன் உறவில் இருந்ததாகவும், லக்னோவில் உள்ள ஹோட்டலில் அந்த பெண்ணுடன் தங்கியிருந்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுவும் இது குறித்து தனது சகோதரியிடம் விவரங்களை பகிர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி மது, “அவரால் எனக்கு ஆபத்து” என சொல்லியிருந்தார். அதே நாளில் அவர் மரணம் அடைந்துள்ளார். ஆகஸ்ட் 4ஆம் தேதி அனுராக் தொலைபேசியில் அழைத்து, “மது இப்போது இல்லை” என கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுவின் மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தற்கொலை எனக் கூறப்பட்டாலும், அதற்கு காரணமாக அனுராக் செய்த துன்புறுத்தல்களே தூண்டுதல் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது, அனுராக் கைது செய்யப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் மற்றும் வரதட்சணை தடைக் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் லக்னோ பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.