தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக  நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. இதனால் பள்ளியில் உள்ள நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

அதன்படி  இந்த மாணவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பணிகளை மேற்கொண்ட பின் அங்கன்வாடி மையத்தின் முன் வளர்ந்திருந்த புதர் செடிகளை அப்புறப்படுத்தினர். மேலும் இந்த மாணவர்களுக்கு யோகா, உடற்பயிற்சி மற்றும் சுகாதார பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்பட்டது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.