தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோவாக நடித்து வந்த ஷாம் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் வெளியான தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் அவருக்கு அண்ணனாக நடித்திருப்பார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சாம் சமீபத்திய பேட்டியில் பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்திற்கான முழு சம்பளத்தையும் கொடுத்தால்தான் டப்பிங் பேச வருவேன் என்று தயாரிப்பாளரிடம் கூறிவிட்டேன். இதனால் அந்த தயாரிப்பாளர் 10 அடியாட்களை என் வீட்டிற்கு அனுப்பி மிரட்டினார். இதனால் நான் பயந்து போய் கேப்டன் விஜயகாந்த்துக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்ததை சொன்னேன். அதன் பிறகு கேப்டன் விஜயகாந்த் தயாரிப்பாளருக்கு தொடர்பு கொண்டு இது இனி என் பிரச்சனை என்று கூறியுள்ளார். மேலும் தயாரிப்பாளரிடம் பேசி பிரச்சினையையும் விஜயகாந்த் தீர்த்து வைத்து விட்டார் என்று கூறியுள்ளார்.