தமிழகத்தில் உள்ள டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது மத்திய அரசாங்க திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், நம்முடைய கோரிக்கையை ஏற்று டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட்ட பிரதமர் மோடிக்கு என்னுடைய நன்றி என்று பதிவிட்டுள்ளார்.