டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியானதை அடுத்து மத்திய அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து டுவிட் செய்திருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை “விவசாயிகளின் நலனுக்காக துணை நிற்கும் பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சார்பாக நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.