இந்தி சினிமாவில் காதலர்களாக வலம் வந்து பிறகு, திருமணம் செய்து கொண்டவர்களில் ஒரு ஜோடி தான் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே. இந்த நிலையில் திரை பிரபலங்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டுவரும் தர்ஷன் யேவலேக்கர் என்பவரின் முடிதிருத்தும் கடை ஒன்றை ரன்வீர் சிங் திறந்து வைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் காணப்பட்ட ரன்வீர் சிங், தரையில் கிடந்த குப்பைகளை அகற்றியுள்ளார். மேலும் திரைபிரபலங்களை படம் பிடிக்கும் புகைப்பட கலைஞரான ரோகன் ஸ்ரேஸ்தா என்பவருடன் பிராங்க் விளையாட்டிலும் ஈடுபட்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதை பார்த்த ஒரு சிலர் பொது நிகழ்ச்சியில் விளம்பரம் தேடுவதற்காக ரன்வீர் இது போன்று செயல்படுகிறார் என குறிப்பிட்டனர்.