பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ராணாவத். இவர் தமிழில் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகை கங்கனா‌ ரணாவத் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் எமர்ஜென்சி படத்தை அவரே இயக்கி, தயாரித்து, நடிக்கிறார். இந்த படத்தை தயாரிப்பது குறித்து நடிகை கங்கா நான் ஒரு பேட்டியில் உருக்கமாக சில விஷயங்களை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, நான் எமர்ஜென்சி படத்திற்காக மும்பையில் இருக்கும் என்னுடைய வீடு உட்பட என்னிடம் இருக்கும் அனைத்து ஆடம்பர பொருட்களையும் அடகு வைத்துள்ளேன். நான் மும்பைக்கு வந்த போது வெறும் 500 ரூபாயோடு வந்தேன். ஒருவேளை எமர்ஜென்சி படம் தோல்வி அடைந்தால் மீண்டும் அதே நிலைக்கு தள்ளப்படுவேன். ஆனால் அதற்காக நான் துவண்டு விடமாட்டேன். என்னுடைய சொந்த காலில் தான் இருப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை கங்கனா கூறியது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.