ஹைதராபாத் மாநிலத்தில் 5 வயது சிறுவன் தெரு நாய்களால் கடித்து குதறப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. சிறுவனின் தந்தையான செக்யூரிட்டியாக வேலைபார்த்து வரும் கங்காதர், தன் மகனை தனது பணியிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது தனியாக சுற்றித் திரிந்த சிறுவனை நாய்கள் தாக்கியது. அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உள்ளூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

https://twitter.com/iamKavithaRao/status/1627923286066872320?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1627923286066872320%7Ctwgr%5Ec1271302fef8262a69ca2d7f617392788f578ee1%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Findia%2Fhorrific-video-of-a-5-year-old-boy-mauled-to-death-by-stray-dogs-in-hyderabad-433440