புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு புதுக்கோட்டை குடிநீர் தொட்டியில் மலம் கலந்து விவகாரம் இன்றும் தீர்க்கப்படாத நிலையில், மற்றொரு ஜாதிய கொடூரம் அரங்கேறியுள்ளது.

அதாவது, புதுக்கோட்டை கல்லாக்கோட்டையை சேர்ந்த பார்வதியம்மாள்(70) என்பவர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்தனர். இதற்கிடையில் மாற்று ஜாதியினர் உடலை தகனம் செய்ய இடம் தராததால் உறவினர்கள் தவித்து வருகின்றனர். இதனால் சடலத்தை வைத்துக்கொண்டு அவர்கள் அங்கும் இங்குமாக அலைந்து வருகின்றனர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.