தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூபாய் 1 லட்சம் மானியம் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்களின் ஐடிஐ, பாலிடெக்னிக் கல்வி படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி நலத்திட்ட உதவித்தொகை ரூபாய். 1,000ல் இருந்து ரூ.3,000-ஆக உயர்த்தி வழங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.