கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுமுகை வடக்கு கம்பம் வீதியில் புவனேஸ்வரன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளி. இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுபஸ்ரீ, சஞ்சய் கௌதம் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் புவனேஸ்வரன் மது குடித்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த அமுதா தனது இரண்டு குழந்தைகளோடு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று வாழ்க்கையை வெறுத்த புவனேஸ்வரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புவனேஸ்வரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.