கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆச்சிபட்டியல் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் பழனிசாமி வளர்த்த மாடு சினையாக இருந்தது. நேற்று அந்த பசு மாடு அடுத்தடுத்து இரண்டு கன்று குட்டிகளை ஈன்றது. இதனை அறிந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் இரண்டு கன்று குட்டிகளையும் பார்த்து சென்றனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.