சென்னை மாவட்டத்தில் உள்ள பொன்னியம்மன்மேடு பூங்காவனத் தோட்டத்தில் பச்சையம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்வதற்காக பேருந்தில் சென்னை தங்க சாலை பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கினார். அங்கிருந்து மற்றொரு பேருந்தில் செல்வதற்காக காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த மாநகர பேருந்து மோதியதால் சக்கரத்தில் சிக்கி பச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்ற மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.