விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் பூபதி(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முத்துப்பாண்டியுடன்(25) சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கோயம்பேடு 100 அடி சாலையில் இருக்கும் புதிய மேம்பாலத்தில் வைத்து முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதி இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த பூபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முத்துப்பாண்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.