ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லட்சுமணராவ் என்பவர் சரவணம்பட்டி ஸ்ரீநகரில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை காரணமாக லட்சுமணராவின் மனைவி மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் ஆகியோர் கோவைக்கு வந்திருந்தனர். சம்பவம் நடைபெற்ற அன்று லட்சுமணராவின் மகன் செல்போனில் பேசிக்கொண்டே கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் சிறுவனிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றனர்.

ஆனால் சிறுவன் செல்போனை இறுக்கமாக பிடித்து கொண்டார். இதனால் கோபம் அடைந்த மர்ம நபர்கள் கத்தியால் சிறுவனின் கையில் குத்தி விட்டு செல்போனை பறித்து அங்கிருந்து தப்பி சென்றனர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.