கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராமசாமி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் தருமாறு அனிதா ராமசாமியிடம் கேட்டுள்ளார்.

அப்போது தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என ராமசாமி கூறியதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து வீட்டு சமையல் அருகில் மர்மமான முறையில் அனிதா இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று அனிதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அனிதா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்தார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.