தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூக்கனூர்பட்டி கிராமத்தில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெய் கணேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடத்தூரில் இருக்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற தனது மகனிடம் ஜெயவேல் அடுத்த தேர்தல் நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.

இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த ஜெய்கணேஷ் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெய் கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.