ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் ரெட்டிபாளையத்தில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருந்துறையில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பேபி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி சந்திரசேகரன் ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பர்கள் 25 பேருடன் மினி பேருந்தில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு நேற்று முன்தினம் நண்பர்கள் மாமரத்துக்கடவு பகுதியில் இருக்கும் காவிரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக சந்திரசேகரன் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சந்திரசேகரின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.