தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, மஞ்சப்பாடி கணவாய் பகுதிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றது, அதிக பாரம் ஏற்றி சென்றது, ஏர்ஹாரன் பொருத்தியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 136 வாகனங்களை அதிகாரிகள் தணிக்கை செய்தனர். இதனையடுத்த வாகன உரிமையாளர்களுக்கு 5 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து உரிய ஆவணம் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.