சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் முல்லை நகர் பகுதியில் ஸ்டீல் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று காலை வேலு மின்சார கூட்டருக்கு சார்ஜ் செய்துவிட்டு முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஸ்கூட்டரில் இருந்து புகை வந்ததை பார்த்த வேலு ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்கூட்டரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.