கரூர் மாவட்டத்தில் உள்ள நடராஜபுரம் காலணியில் மணிராஜ் என்பவர் வசித்து வருகிறார் இவரது மனைவி மைதிலி ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் சம்பவம் நடைபெற்ற அன்று மைதிலி மன உளைச்சலில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மைதிலியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.