சென்னையிலிருந்து விஜயவாடா செல்லும் ரயில் சேவை மார்ச் மூன்றாம் தேதி அதாவது இன்று மாற்று பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தினம் தோறும் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் பகல் 2.50 மணிக்கு ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்றடையும். இந்த ரயில் இன்று அதாவது மார்ச் 3ஆம் தேதி நியூ குண்டூர் வழியாக செல்வதற்கு பதில் தெனாலி,கிருஷ்ணா கால்வாய் வழியாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பயணிகளுக்கு அறிவித்துள்ளது.